ஏ சி வெடித்ததால் பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில்  ஆல்பர்ட் என்பவர் மின்சார வாரியத்திலும் அவரது மனைவி அஞ்சலா மேரி அரசு பள்ளியில் தலைமையாசிரியராகவும் வேலை பார்த்து வந்தனர். நேற்றிரவு வீட்டில் தூங்கும்போது ஏ சி போட்டுள்ளனர். அதிகாலை நடைபயிற்சிக்காக ஆல்பர்ட் வெளியே சென்ற நிலையில் அஞ்சலா மேரி உறங்கி கொண்டிருந்தார்.

திடீரென ஏ சி  வெடித்து அதில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதனால் மூச்சுத் திணறிய நிலையில் அஞ்சலா மேரி பரிதாபமாக இறந்தார். நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்த ஆல்பர்ட், மனைவி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆல்பர்ட் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அஞ்சலா மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school headmaster died for air conditioner fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->