டுடோரியல் ஆசிரியர் மீது பள்ளி மாணவி பாலியல் புகார்..! திடுக்கிடும் தகவலை தெரிவித்த பள்ளி மாணவி..!! கடுப்பான காவலர்கள்..!!!
டுடோரியல் ஆசிரியர் மீது பள்ளி மாணவி பாலியல் புகார்..! திடுக்கிடும் தகவலை தெரிவித்த பள்ளி மாணவி..!! கடுப்பான காவலர்கள்..!!!
காதலை வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவேன் என்று மிரட்டிய ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்து சிறையில் தள்ள முயன்ற 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி. சேலத்தில் பரபரப்பு.
சேலம் மாவட்டம், ஓமலூர் மேட்டூர் சாலையில் இயங்கிவரும் தனியார் டுடோரியல் கல்லூரியில் பள்ளி பொது தெரிவில் தோல்வி அடைந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இந்த தனியார் டுடோரியல் கல்லூரியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனக்கு பாடம் நடத்தும் சுந்தரம் என்ற ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அம்மாணவியின் உறவுக்கார வாலிபர்கள் 4 பேர் அங்கு சென்று ஆசிரியர் சுந்தரத்தை, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனையறிந்த போலீசார், அந்த வாலிபர்களிடம் இருந்து ஆசிரியரை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல்நிலையத்தில், ஆசிரியரிடமும், மாணவியிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பள்ளி மாணவி, ஒருவரை காதலித்ததும், அது ஆசிரியருக்கு தெரியவரவே, ஆசிரியர் மாணவியை கண்டித்து விட்டு, அந்த மாணவியை வீட்டிற்கு தெரிவித்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதில் இருந்து தப்பிக்கவே மாணவி, ஆசிரியரை உறவினர்களிடம் சிக்க வைத்தது தெரியவந்தது. இதில் காயமடைந்த ஆசிரியர் சுந்தரம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, அந்த மாணவியை போலீசார் கண்டித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.