தந்தை கண்முன்னே ரத்தவெள்ளத்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரம்! துடிதுடித்து கதறிய தந்தை.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த அனகாபுத்தூர் குருசாமி நகரில் வசித்து வந்தவர்  அம்ஜத்கான். இவருடைய மகள் ஆலியா. 13 வயது நிறைந்த இவர்  தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி. பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று காலை தனது தந்தை அஜ்மத்கானுடன் இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது , அவர்கள் பல்லாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் மினி பேருந்து ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது  அஜ்மத் அந்த பேருந்தை கடந்து முன்னோக்கி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அவருக்கு எதிரே மற்றொரு வாகனம் ஒன்று வேகமாக வந்ததால் அஜ்மத் திடீர் என பிரேக் பிடித்துள்ளார். இதில் தந்தை-மகள் இருவரும் நிலைதடுமாறி  கீழே விழுந்தனர்.

இதில் மினி பேருந்தின் பின்பக்க சக்கரம் மாணவி ஆலியாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஆலியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அம்ஜத்கான் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

               

மேலும் இதனால் மினி பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த ஆலியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காயமடைந்த அஜ்மத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மினி பேருந்து டிரைவரான ஆறுமுகம் ன்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை கண்ணெதிரே பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl dead infront of father by accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->