பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி..! மருத்துவர்கள் இல்லாமல் உயிருக்கு போராடி... உயிரை விட்ட பள்ளி மாணவி..!! - Seithipunal
Seithipunal


அரசுப்பள்ளியில் தீடிரென மயங்கி விழுந்த மாணவி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லதாதல் உயிருக்கு போராடி உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மகாலட்சுமி (13). இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் நடைபெற்ற இறைவணக்க கூட்டத்தில் மாணவி மகாலட்சுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, மாணவி மகாலட்சுமியை பள்ளி நிர்வாகம் அருகிலுள்ள கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தாவல் அறிந்து வந்த மாணவியின் பெற்றோர்களும், உறவினர்களுக்கும் அதிர்ச்சிகாத்திருந்தது. மாணவிக்கு சிகிச்சை அழிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாமல் மாணவி உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் விருத்தாசலம் சேத்தியாத்தோப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததாலேயே மகாலட்சுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி கோஷமிட்டபடி பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SCHOOL GIRL DEAD IN GOVT HOSPITAL


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->