பள்ளி மாணவியுடன் காதலன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு..! விழுப்புரம் அருகே அதிர்ச்சி சம்பவம்..!!
பள்ளி மாணவியுடன் காதலன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு..! விழுப்புரம் அருகே அதிர்ச்சி சம்பவம்..!!
விழுப்புரம் அருகே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மனைவியும் அவரின் காதலனும் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே வரதப்பனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரின் மகள் பூஜா (16). பூஜா நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பு செல்லவுள்ளார்.
இந்நிலையில், கடந்த 06 மாதகாலமாக அதே ஊரை சேர்ந்த விக்னேஷ்(21) என்பவரும் போஜாவும் காதலித்து வந்துள்ளனர். விக்னேஷ் 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாய பணி செய்து வருகிறார்.
இவர்களின் காதல் விவகாரம் பள்ளி மாணவி பூஜாவின் பெற்றோருக்கு தெரிய வரவே, போஜாவின் பெற்றோர் ''தற்போது உனக்கு திருமண வயது கூட எட்டவில்லை, உன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, காலம் வரும்போது மற்றதை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்'', என அறிவுறித்தியுள்ளனர்.
இதனை காதில் வாங்காத மாணவி பூஜா கடந்த 02 தினங்களுக்கு முன் காதலன் விக்னேஷுடன் வீட்டை விட்டு வெளியேறினார், பின்னர், உளையநல்லூர் செல்லும் சாலை அருகே இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மறுநாள் காலை அந்த பகுதி மக்கள் இவர்கள் இறந்துகிடப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவல் அறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர், கணபதி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவியுடன் காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school girl and his lover suicide