மீண்டும் மணல் கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல்.! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!!
மீண்டும் மணல் கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல்.! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!!
நாளுக்கு நாள் தமிழகத்தில் மணல் கொள்ளையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. இவர்களை தட்டி கேட்கும் பொதுமக்கள், அதிகாரிகள், போலீசார் உட்பட அனைவர் மீதும் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 3 மாதங்களுக்கு முன் மணல் மாபியாக்களை பிடிக்க சென்ற தலைமை காவலர் ஒருவரை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருவேல்பட்டு கிராமத்தில் திருவெண்ணைய் நல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார் (35) என்பவர் இன்று அதிகாலை அந்த பகுதி அருகே வாகன சோதனையில் இருந்துள்ளார்.
அந்த நேரம் பார்த்து, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தலைமை காவலர் செந்தில்குமாரை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதனால், படுகாயம் அடைந்த தலைமை காவலர் செந்தில்குமாரை மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைமை காவலரை கத்தியால் குத்திய மூன்று நபர்களை உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்கானிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தப்பி ஓடிய 3 பேரும் பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
SAND MAFIA ATTACK TO POLICE