ஒரே பெற்றோர்!! ஒரே பெயர்!! ஒரே தேதி!! ஒரே பான் நம்பரா? இது என்னடா டிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை!!
ஒரே பெற்றோர்!! ஒரே பெயர்!! ஒரே தேதி!! ஒரே பான் நம்பரா? இது என்னடா டிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை!!
சிவகங்கை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும், சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி அருகே வெற்றியூர் என்ற கிராமத்தை சேர்ந்த சேகர் (52) என்பவரது வீடு, காரைக்குடி போலீஸ் காலனியில் உள்ளது. இவர், 2008-ம் ஆண்டு வருமான வரித்துறை மூலம், CCOPS0932F என்ற எண்ணில் பான் கார்டு பெற்றுள்ளார். இதையே, தனது வங்கி கணக்குகளுடன் இணைத்தும் வைத்துள்ளார்.
இந்நிலையில், இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது, வங்கி மேலாளர், “பல இடங்களில் நீங்கள் கடன் வாங்கி நிலுவை வைத்து இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு கடன் தர இயலாது” என மறுத்துவிட்டார். அதற்கு, சேகர், “நான் இதுவரை எங்கும் கடன் வாங்கியதே இல்லை” என்று கூறியுள்ளார்.
அதற்கு, மேலாளர், அதற்கு ஆதாரமாக ஒருவரின் கடன் பற்றிய தகவல்கள் நிறைந்த அறிக்கையை அவரிடம் கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில், காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கடன் வாங்கி நிலுவையில் வைத்திருப்பதாக தகவல் இருந்தது. இதனில் அதிர்ச்சி அடைந்த சேகர், ஏனாத்தூரில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று மேலாளரிடம், “நான் உங்கள் வங்கியில் கடன் வாங்கவே இல்லை. ஆனால் எனது பெயரில் உங்களது வங்கியில் எப்படி கடன் நிலுவை உள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர், கோப்புகளை ஆராய்ச்சி செய்ய, அந்த வங்கியில் கடன் வாங்கி இருப்பவர் ஏனாத்தூர் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் என்பதும் . மேலும் அவர் வங்கிக்கு வழங்கிய பான்கார்டு எண்ணும், சப்-இன்ஸ்பெக்டர் பான்கார்டு நம்பரும் ஒன்றாக இருப்பதால் தான், காண்டிராக்டர் சேகர் வாங்கிய கடன், சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் சிபில் அறிக்கையில் எதிரொலித்து இருக்கிறது.
ஒரே எண்ணில் எப்படி இருவருக்கும் பான்கார்டு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்த போது, காண்டிராக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவருடைய பெயரும் சேகர் மற்றும் இவர்கள் இருவருடைய பிறந்த தேதியும் ஒன்றாக இருந்துள்ளது. மேலும்,இருவரின் தந்தை பெயரும் சுப்பிரமணியன், தாய் பெயர் சரோஜா.
இதனால், தான் இருவருக்கும் ஒரே எண்ணில் பான்கார்டு வழங்கபட்டுள்ளது. இது, குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகார் மனு அளித்துள்ளார்.