கொடூரமாக வெட்டப்பட்ட பாமக நிர்வாகி! வேலூர் குடியாத்தத்தில் திடீர் பதற்றம்!
கொடூரமாக வெட்டப்பட்ட பாமக நிர்வாகி! வேலூர் குடியாத்தத்தில் திடீர் பதற்றம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் ஒத்தவாடை பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். 38 வயதான அவர் குடியாத்தம் பா.ம.க. நகர செயலாளராக உள்ளார். இவர் அங்கு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று அவருடைய நிதி நிறுவனத்திற்கு மதியம் 12 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே ஆட்டோவில் வந்த கூலிப்படை கும்பல் 4 பேர், யாரும் எதிர்பாராத விதமாக பா.ம.க. நிர்வாகி சவுந்தரராஜனை வழிமறித்து சரமாரியாக வெட்டி தள்ளினார்கள். அவருக்கு கை, தலை, முகத்தில் பலத்த வெட்டு விழுந்ததால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நிற்காமல் ஓடிக்கொகொண்டிருந்தார். ஆனால் வெறி அடங்காத கூலிப்படை கும்பல் விடாமல் ஓட ஓட துரத்தி வெட்ட முயன்றது.
கன நேரத்தில் சுதாரித்துக்கொண்ட சவுந்தரராஜன், கூலிப்படையினரிடம் இருந்து தப்பித்து அருகில் உள்ள ஒரு வீட்டிற்க்குள் ஓடிச்சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். அப்போதும் வெறி அடங்காத கூலிப்படை கொலைவெறியுன் கதவை உடைத்து கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அனைவரும் கும்பலாக திரண்டதால் பதற்றமடைந்த கூலிப்படை அரிவாளை காட்டி பொதுமக்களுக்கு பயம் காட்டியது.
இந்த கொடூர சம்பவம் குறித்த தகவலறிந்ததும், குடியாத்தம் நகர காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரை கண்டதும் கூலிப்படை வேகவேகமாக தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் வீட்டுக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சவுந்தரராஜனை காவல்துறையினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெட்டுப்பட்ட பா.ம.க. நிர்வாகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை கும்பலை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளனர்.
English Summary
rowdys attaked pmk person near gudiyattam