அநியாயத்தை தட்டிக் கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து..! மதுவால் வந்த வினை..!!
அநியாயத்தை தட்டிக் கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து..! மதுவால் வந்த வினை..!!
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை வாகம்புலி தெருவைச் சேர்ந்தவர் முகமது அனீஸ் (வயது 25). இவர் தேனி ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வருகிறார்.
நேற்று முன் தினம், டூட்டி முடிந்து திரும்பிய அவர், தனது தென்கரைப் பகுதியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, காற்று வாங்குவதற்காக, வெளியில் வந்தார் அனீஸ்.
அவர் வெளியே வந்த போது, அவரது வீட்டின் முன்பாக, அந்த ஏரியாவைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்தையா என்பவர், மது அருந்திக் கொண்டிருந்தார். அதனால், முனீஸ், ரவுடி முத்தையாவை, தனது வீட்டின் முன்பாக மது அருந்தக் கூடாது, என்று தடுத்துள்ளார்.
ஆனால், அவர் பேச்சை முத்தையா கண்டு கொள்ளவில்லை. எனவே, மீண்டும் முனீஸ், முத்தையாவை, தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முத்தையா போதையில் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, அனீஸைக் குத்தினார். காயம் அடைந்த அனீஸ், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
செய்தியைக் கேள்விப்பட்ட, பெரியகுளம் போலீசார், காவல் ஆய்வாளர் மதனகலா தலைமையில், சென்று, சம்பவம் நடந்த இடத்தில், கத்தியுடன் இருந்த ரவுடி முத்தையாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரவுடி முத்தையா மீது, ஏற்கனவே, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
English Summary
ROWDY TRY TO KILL IN POLICE