கொள்ளையடிக்க முயன்று மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கிய மூன்று இளம்பெண்கள்!!  - Seithipunal
Seithipunal


மதுரை அருகே விஜயன் என்பவரின் மனைவி கயல்விழி என்பவர் நேற்று பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியில் நடந்த போது அவரை பின் தொடர்ந்தவாறு வந்த 3 பெண்கள் எதிர்பாராத விதமாக திடீரென அவரிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு ஒட்டியுள்ளனர். 

இதனால், மிகவும் அதிர்ச்சிக்குளான கயல்விழி கத்தி கூச்சலிட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று அந்த மூன்று பெண்களையும் வளைத்து பிடித்துள்ளனர். 

பின்னர், அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து சென்று ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள், இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் துரத்திச் சென்று 3 பேரையும் பிடித்தனர்.

திடீர்நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் மூவரும் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர்கள் என்பதும், சுதா (40), ரேவதி (25), காமாட்சி (35) என தெரியவந்துள்ளது. 

அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in madurai periyar nagar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->