தற்போது…!சாத்துார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து….! பலியானது எத்தனை பேர்? அதிர்ச்சி தகவல்…!
right now - biggest fire accident in Sathur Crockers factory
விருதுநகர் மாவட்டம், சாத்துார் குகன்பாறை என்ற பகுதியில், தனியாருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது.
இன்று காலை இந்த பட்டாசுத் தொழிற்சாலையில், இருபதுக்கும் மேற்பட்டவர்கள், பணி புரிந்து வந்தனர். ரோல் கேப் தயாரிக்கும் பணியில், இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, டமார், என்ற பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.
அடுத்த நொடி, அந்தக் கட்டிடம் அப்படியே, தீப்பற்றி எரிந்து சரிந்து விழுந்தது. வெடி விபத்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த பட்டாசு மருந்துகளில் எல்லாம் பற்றிக் கொண்டது.
இதனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள், அந்தக் கட்டிடத்திற்குள்ளே மாட்டிக் கொண்டனர். தீ பயங்கரமாக கொழுந்து விட்டு எரிகிறது.
உடனே, தீயணைப்புத் துறையினர், வந்தனர். கடுமையான முயற்சிக்குப் பிறகு, இடிபாடுகளுக்கிடையே, கருகிய நிலையில் கிடந்த இரண்டு பெண்களின் சடலங்களை மீட்டனர்.
செய்தி அறிந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம், தற்போது, அங்கு கூடி உள்ளனர். தற்போது, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது வரை, இந்த வெடி விபத்தில், ஐந்து பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
English Summary
right now - biggest fire accident in Sathur Crockers factory