போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!. ஒன்றுகூடிய பொதுமக்கள்!.
68 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம்.
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் குறிஞ்சி நகரை சேர்ந்த திரவியம் என்கிற ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். நேற்று விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதி சிறுமிகள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது 9 வயது சிறுமியிடம் அவர் ஆபாச செய்கைகளை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதை அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். மேலும் இந்த விஷயம் அந்த பகுதியில் அனைவரிடமும் பரவியது. ஆத்திரம் அடைந்த அக்கம் பக்கத்தினர் திரவியத்தின் வீட்டை நோக்கி விரைந்தனர். அதனை அறிந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திரவியம் வீட்டுக்குள் ஓடி கதவை மூடிக்கொண்டார். அப்பகுதி மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சமரசம் பேசி பொதுமக்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் திரவியத்தை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வேனில் அழைத்துச் சென்றனர்.
திரவியம், அந்த பகுதியை சேர்ந்த பல சிறுமிகளுக்கு இதுபோன்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 68 வயது நிரம்பியவர், மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரே இவ்வாறு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
retired police sub inspector sexual abuse to 9 years young girl