படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள்!
relief fund to ramalingam family
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அவரது கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டார் .
கடந்த 5ம் தேதி கும்பகோணம் அருகே திருபுவனத்தில் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு, அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை தடைவிதித்தது. இப்பேரணியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வரும் வழியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன், படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அரசு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மேலும் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும், படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு, நீதி கிடைக்கும் வரை இந்து மக்கள் கட்சி போராடும் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
English Summary
relief fund to ramalingam family