“பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவோம்” – என்று மிரட்டிய தமிழக அமைச்சரின் பி.ஏ…!
refused to return back the money
தேனி மாவட்டம் கம்பம் ரோட்டில் வசித்து வருகிறார் நவுசாத் அகமது. இவர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வான டாக்டர் முகமது சலீமின் மகன். இவரது நண்பர் ஒருவர் மூலமாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளரான நாகராஜ் என்பவரது நட்பு கிடைத்தது.
அப்போது நாகராஜ், “மின் வாரியத்தில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரு பணிக்கு ரூ.2.50 லட்சம் வழங்கினால், வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தார்.
நாகராஜின் பேச்சை நம்பி, நவுசாத் அகமது, தனக்கு தெரிந்தவர்களிம் கூறி, 48 லட்சத்தை வசூலித்து, திருச்சியில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நாகராஜிடம் கொடுத்தார்.
ஆனால், கூறியபடி, நாகராஜ் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை. அதனால், கொடுத்த பணத்தைக் கேட்ட போது, 15 லட்ச ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார். மீதிப் பணம் 33 லட்சத்தைக் கேட்ட போது, “இனி என்னிடம் கொடுத்த மீதிப் பணத்தை திருப்பிக் கேட்டால், கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டி உள்ளார்.
இது குறித்து, நவுசாத் அகமது, தேனி மாவட்டக் குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், அமைச்சரின் பி.ஏ. நாகராஜ் மீது, வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
English Summary
refused to return back the money