#BREAKING திமுக எம்எல்ஏ அலுவலகம் முன் அரசு பணியாளர் தீக்குளிப்பு!
திமுக எம்எல்ஏ அலுவலகம் முன் அரசு பணியாளர் தீக்குளிப்பு!
ராணிப்பேட்டை சட்டமன்ற அலுவகம் முன் துப்புறவு தொழிலாளி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம்,ராணிப்பேட்டை சட்டமன்ற அலுவலகம் முன் துப்பரவு பணியாளர் ஆனந்த் தீடிரென தான் எடுத்துவந்த மண்ணெண்ணெயை தான் மேலே ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பொது மக்கள் அவரின் மீது எறிந்த தீயை கடும் முயற்சி செய்து அனைத்தனர். பலத்த காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 அவசர ஊர்திக்கு அழைத்தனர்.
ஆனால், அவசர ஊர்தியை அழைத்து, 1 மணி நேரம் ஆகியும் வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலைமறியலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தீக்குளித்ததுக்கு காரணமாக ஆனந்த் கூறுகையில், '' கடந்த ஒரு வருடமாக என்னை பணியிடை மாற்றம் செய்து கொண்டே இருக்கின்றனர். இது சம்மந்தமாக புகார் அளித்ததுக்கு, என்னை பணியிடை நீக்கி உத்தரவிட்டுள்ளார். நான் எந்த தவறும் செய்யாத பொது என் மேல் நடவடிக்கை எடுத்ததால், இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார்.
ராணுப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த காந்தி எம்எல்ஏ வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அலுவலகம் அருகில் தான் நகராட்சி கட்டிடமும் உள்ளது.
English Summary
RANIPET MLA OFFICE OPPOSITE A MAN ATTEMPT SUICIDE