திருவிழா பார்க்கச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்..! நண்பனுக்காக சென்ற இடத்தில் நடந்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கே. வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் நாகமணி (வயது 21). இவர் தற்போது, மதுரையில் உள்ள பராசக்தி நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

நேற்று முன் தினம், சொந்த ஊரான வேப்பங்குளத்தில் நடைபெற்ற அரிய நாச்சியம்மன் திருவிழாவைக் காண, குடும்பத்துடன் வந்திருந்தார்.

கோயிலில் வந்து சாமி கும்பிட்டு விட்டு, அன்று இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சியைக் காணச் சென்றார். அப்போது, டூ வீலரில் வந்த சில மர்ம நபர்கள்  நாகமணியிடம் வந்து, “மதுரையில் இருந்து நண்பர்கள் சிலர், நாகமணியைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறினர்”.

அதை நம்பி, அவர்களுடன், டூ வீலரில் சென்றார் நாகமணி. அவரை அழைத்துச் சென்ற அந்த மர்ம கும்பல், நாகமணியை புதுக்கோட்டை ஒழுகப்புலி கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்று, தங்களிடம் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், நாகமணியைத் தாக்கினர்.

இதனால் பலத்த காயத்துடன், அந்த இடத்திலேயே நாகமணி துடிதுடித்து இறந்தார். மேலும், அந்தக் கும்பல் நாகமணியின் முகம் தெரியாமல் இருப்பதற்காக, அவரது முகத்தைச் சிதைத்து விட்டது.

நேற்று காலை, அந்த வழியாகச் சென்றவர்கள், நாகமணி இறந்து கிடப்பதைக் கண்டு, அந்த தகவலை, கோவிலாங்குளம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

கொலையாளிகளைப் பிடிக்க, கமுதி ஏ.டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

கமுதி அருகே கழுத்தறிவான், புதுக்கோட்டை, அரியமங்கலம் ஆகிய கிராமங்களில், கடந்த ஓராண்டில், தொடர்ச்சியாக 3 பேர் வெட்டிக் கொல்லப் பட்டனர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் செய்த கொலையாக இருக்குமோ, என்ற கோணத்திலும், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர் போலீசார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Nagamani Death for Function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->