"இவர்கள் மட்டும் இல்லையெனில் உலகமே இல்லை.,அது எங்களுக்கு தெரியும்" ராமதாஸ் உருக்கமான பேச்சு!!  - Seithipunal
Seithipunal


நேற்று தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு, ஆதரவு கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருடன் அமைச்சர் கே பி அன்பழகன், பாமக தலைவர் ஜிகே மணி ஆகியோர்  உடனிருந்தனர்.

அப்போது உரையாடிய ராமதாஸ், "மக்களுக்கும், தமிழகத்துக்கும் இனி தேவை இல்லாத, பயன்படாத கட்சி திமுக. விவசாயிகளும், உழவர்களும் இல்லையெனில் உலகம் இல்லை. அன்புமணி இதனை நன்றாக உணர்ந்தவர்.

Related image

அதனால்தான், நாடாளுமன்றத்தில் ஒருமுறை "எனது தாய், தந்தைக்கு அடுத்தபடியாக நான் விவசாயிகளை பார்க்கிறேன்" என அவர் பேசினார். நீர் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து நன்கு அறிந்தவர். 

விவசாயிகளுக்கு பாமக சார்பில் நலத் திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளோம். அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் நீங்கள் மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு தரவேண்டும். 

Image result for அன்புமணி seithipunal

அதிமுகவில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு 100க்கு 100 சதவீதம் வெற்றியை தாருங்கள். அதிமுகவும், பாமகவும் இணைந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற காத்திருக்கிறது.

பெண்களை அனைத்து வீடுகளிலும் படிக்க வையுங்கள். அவர்களை மருத்துவர், ஐஏஎஸ் என பணிக்கு அனுப்புங்கள். பெண்கள் தான் நாட்டின் கண்கள்" என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss Speech in dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->