சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய செய்தி! சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட மக்களின் கவனத்திற்கு...!
Rain Update News Tamilnadu
தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வந்த கஜா புயலால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. வட தமிழகத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதையடுத்து உருவான புயலும், தமிழகத்திற்கு வராமல், ஆந்திர மாநிலம் சென்றது. இதனால் தமிழகத்தில் மழை வராமல் போனது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை வரை இந்த சூழல் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Rain Update News Tamilnadu