எதிர்பாராத நேரத்தில், ரயில் நிலையத்தில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!!
Railway accident
கிழக்கு தாம்பரத்தில் உள்ள கணபதி புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(50) என்பவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்..
நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்ததும் மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் வந்தார். அப்போது ரயிலில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.
அவர் செல்போனை பார்த்தபடியே நடந்து சென்றதால் கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால், அப்போது அங்கு வந்த ரயில் அவர் மீது மோதியது. அதனால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.