பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!!
railway accident
சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பணியில் உள்ளவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆகியோர் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இதனால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
இதேபோல், கடந்த ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர், தண்டவாள மின்கம்பத்தில் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது கூலி தொழிலாளி விநாயகம்(65) என்பவர் ரெயிலில் ஏற முயன்றார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரெயில் பெட்டியின் படியில் தொங்கியபடி நின்றார். இந்த நிலையில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் தொங்கியபடி சென்ற முதியவர் கீழே விழுந்து பலியானார்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விநாயகம் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார். அந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விநாயகம் பரிதாபமாக இறந்தார்.