'நானே விட்டு கொடுத்துவிடுவேன்' காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பதில்!!
Ragul gandhi says about priyanka gandhi
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மராட்டிய மாநிலம், புனே நகரில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது, பிரியங்கா குறித்த கேள்விக்கு அவர் சுவாரசியமான பதில்களை வெளியிட்டுள்ளார். அவர், "வன்முறையால் மிகக் கடுமையாக எனது குடும்பம் பலமுறை தாக்கப்பட்டுள்ளது.
எனது தந்தை ராஜீவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தியும் பயங்கரவாதத்திற்கு பலியானார்கள். நானும், பிரியங்காவும் சிறுவயதிலிருந்தே அன்பாக பழகி வருகிறோம். எங்களுக்குள் சிறுவயதில் சண்டை வந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம் சண்டை வருவதில்லை.
பிரியங்கா எனக்கு சகோதரி மட்டுமல்ல. நல்ல தோழியும் கூட எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்குள் கடுமையான வாக்குவாதம் வந்ததே இல்லை. நாங்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றும் சமயங்களில் சூழ்நிலையை புரிந்து நாங்கள் விட்டுக் கொடுத்து விடுவோம்.
எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால் நாங்கள் ஒன்றிணைந்து சிறப்பாக பணிபுரிவோம். அதேபோல், பிரியங்கா எனக்கு ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்ட தவறுவதே இல்லை. அந்த ராக்கி தானாக அறுந்து விழும் வரை எனது கையிலேயே இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ragul gandhi says about priyanka gandhi