வித்தியாசமான உடையில் மாணவிகளை சந்தித்த ராகுல்!! வெளியான காரணம்?!  - Seithipunal
Seithipunal


வரும் 17வது மக்களவைத் தேர்தலுக்காக, தமிழகத்தில் இன்று திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்.

இலங்கையில் இனபடுகொலைக்கு காரணமான, திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்கும் வகையில், தமிழர்கள் அனைவரும் கோ பேக் ராகுல் என்ற ஹாஸ் டேக் மூலமாகவும் கோ பேக் பப்பு என்ற ஹாஸ் டேக்  மூலமாகவும் டுவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது சென்னை ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரியில் ராகுல் காந்தி மணாவிகள் மத்தியில் உரையாடி வருகிறார். மாணவர்கள் பலர் நேரடியாக கேள்வி கேட்க அவர் மேடையில் இருந்தபடி ஆங்கிலத்தில் பதில் அளித்து வருகிறார். 

ராகுலின் தோற்றத்தில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும் வழக்கமான உடையில் அரசியல் நிகழ்வுகள் மற்றும் போது இடங்களில் தோன்றும் ராகுல் திடீரெனெ கல்லூரி இளைஞரின் உடை போல ஒரு டி.சர்ட்டும், ஜீன்சும் அணிந்து மாணவிகள் முன்னிலையில் உரையாடி வருகிறார். 

இது காண்போர் அனைவரையும் புருவம் உயர்த்தி பார்க்க வைக்கிறது. இவ்வாறு ராகுல் கல்லூரி மாணவர்களை சந்திக்க தனது வழக்கமான உடையை பயன்படுத்தாமல் புதிய முறையில் உடையணிந்து வெளிப்படுவது மாணவிகளை இம்ப்ரெஸ் செய்வதற்காகவா என பலர் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். 

இதேபோன்று ஏற்கனவே தமிழகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களிடம் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragul gandhi in stella marry college


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->