தமிழக முதல்வரின் அடுத்தடுத்த அதிரடி!! உலக சாதனை படைக்க புதிய முயற்சி! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக  பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  மதுரையில், புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.  முதல் சுற்றில் 150 காளைகள், 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதல் சுற்றில் 2 மாடுபிடி வீரர்கள், 4 பார்வையாளர்கள் காயம் அடைந்தனர். 

2000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி உலக சாதனைக்காக நடத்தப்படுகிறது.  கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai Viralimalai Jallikattu Started


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->