புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் இருவர் பரிதாப பலி!
Pudukottai Viralimalai Jallikattu 2 visitors Death
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரையில், புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்து வருகிறது.
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி உலக சாதனைக்காக நடத்தப்படுகிறது. கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விராலிமலை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் சொரியம்பட்டியை சேர்ந்த ராமு(25) மற்றும் சதீஷ்குமார்(43) ஆகிய பார்வையாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
Pudukottai Viralimalai Jallikattu 2 visitors Death