பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்….! கொதித்தெழுந்த மாணவிகளின் பெற்றோர் செய்த காரியம்….!
public reacted against a bad teacher
மதுரை மாவட்டம் சேடபட்டிக்கு அருகே உள்ளது சின்னகட்டளை கிராமம். இங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில், பகுதி நேர கணிணி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் இதயதுல்லா (வயது 36). இவர், தங்களைப் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார், என்றும், இதை வெளியே சொன்னால், பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவேன் என்றும் மிரட்டுவதாக, பல மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை பரமேஸ்வரியிடம் தெரிவித்தனர்.
ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு கண்டிக்கவும் இல்லை.
இதனால், அந்த மாணவிகள், இந்த விஷயத்தை தங்கள் பெற்றோரிடம் கூறினர்.
அதைக் கேட்டு கொதிப்படைந்த பெற்றோர், பள்ளியின் முன்பாகக் கூடினர். அந்த ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த செய்தி அறிந்து, உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி முத்தையா தலைமையில், அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர். செய்தி அறிந்து பேரையூர் காவல் துறையினரும் வந்தனர்.
ஆனால் அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இறுதியாக, இதயதுல்லாவை, போலீஸ் வேனில் ஏற்றிச் செல்ல முயன்ற போது, போலீஸ் கூட்டத்திற்குள் நுழைந்த மக்கள், இதயதுல்லவை, அடித்து துவைத்தனர்.
செய்தி அறிந்து, அக்கம் பக்கத்து மக்களும் சேர்ந்து, இதயதுல்லாவை அடித்து நொறுக்கினர்.
பின், அவர்களிடமிருந்து இதயதுல்லாவை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், போலீசார்.
English Summary
public reacted against a bad teacher