மோடி வருகையை ஒட்டி திருப்பூரில் கலவரம்?! குவிக்கப்பட்ட போலீசார்!!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரிக்கும், திருப்பூருக்கும் வருகைதரும் பிரதமர் மோடியை தனது தலைமையில், கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.

அதன்படி பிப்ரவரி 10 இன்று, திருப்பூர், பெருமாநல்லூர் பாஜக சார்பில் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அண்ணாசிலை அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பினால், அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களின் தர்ணா போராட்டத்திற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போலீசாரை எதிர்க்கும் வகையில் மதிமுக தொண்டர் ஒருவர் மின்மாற்றியில் ஏறி போலீசாருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கலவரம் ஏற்படும் சூழல் காரணமாக பொதுமக்கள் பீதியில் உள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protest in trippur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->