தேமுதிக திமுக பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? திமுகவை கழுவி ஊற்றிய பிரேமலதா!! கொந்தளித்த துரைமுருகன் ஆர்மி!!
premaladha says about Dmk party
திமுக என்றாலே தில்லு முள்ளு கட்சி என்பது தான் பொருள் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
திமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் பல்வேறு குழப்பங்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. திமுக பொருளாளர் தேமுதிகவை இழிவு படுத்தும் விதமாக பேசிய துரைமுருகனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அதில்," திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, நான் தேமுதிக பொருளாளராக பதில் அளிக்க காத்திருக்கிறேன். எங்களுக்கு திருமணம் செய்து வைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அவர் மீது கேப்டன் கொண்டுள்ள நேசத்தை தமிழகம் அறியும். ஆனால், அரசியல் லாபத்திற்காக திமுக அன்றிலிருந்து தேமுதிகவை வஞ்சித்துள்ளது.
எம்ஜிஆர் அன்றே கூறினார். திமுக என்றால் தில்லு முள்ளு கட்சி. திருடர் கட்சி என அது முற்றிலும் உண்மை. துரைமுருகனின் இந்த நடத்தை தான் திமுகவின் உண்மை முகத்திற்கான அடையாளம்.
தமிழரின் பண்பாடு என்பது என்ன? எதிரி நமது வீட்டிற்கு வந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பது தான். ஒரு மூத்த அரசியல்வாதியாக திமுக பொருளாளர் துரைமுருகன் அப்படியா செய்துள்ளார்? வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கீழ்த்தரமான அரசியலை செய்வார் என்பதை அவரை பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன்.
துரைமுருகன் உட்காந்த இடத்திலேயே தூங்குவார் என கூறுவார். அது உண்மை தான் போல. அவர் தூக்கத்தில் அன்று உளறியதாகவே நான் பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.
English Summary
premaladha says about Dmk party