அது பண்டம் இல்லாத காலி டப்பா!! ஸ்டாலினை விளாசி தள்ளிய அமைச்சர்!! உடன்பிறப்புகள் கொந்தளிப்பு!!
pon.radhakrishnan says about stalin
இன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் தொடர்ந்து சமய மாநாட்டிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அதிமுக கூட்டணியில் நிச்சயமா தேமுதிக இணையும். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
அதிமுக பாஜக கூட்டணி தான் வெற்றி கூட்டணி. ஐஜேகேவில் திமுக இணைந்திருப்பதால் பாஜகவிற்கு எந்த விதமாக பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரமாண்டம் போன்றதொரு கற்பனையை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
அது பண்டம் இல்லாத காலி டப்பா! பி.ஆர். பாண்டியன் விவசாயிகளின் தலைவராக அல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.அவர் அரசியல் பின்புலம் உடையவர்.
அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஆனால், மதசார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்" என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஸ்டாலின் எடுத்த திமுக கூட்டணி முடிவுகளை காலிடப்ப என கூறியிருப்பதால் திமுக தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளதாக தெரிகிறது.
English Summary
pon.radhakrishnan says about stalin