வெறிசோடிய சென்னை! காலியாக உள்ள சாலைகள்!
Pongal celebration in chennai people
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக, சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதால் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக 3 நாட்கள் அரசு விடுமுறை விடுவது வழங்கம். அதேபோல் இந்த ஆண்டும் 15,16,17 ஆகிய 3 தினங்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், 14-ம் தேதி திங்கட்கிழமை போகிப் பண்டிகையன்று பணி நாளாக இருந்தது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் 14-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
மெகா விடுமுறையை கொண்டாட, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
English Summary
Pongal celebration in chennai people