பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய திருப்பம்! இளம்பெண் வெளியிட்ட ஆடியோவால், அம்பலமான அதிரவைக்கும் மனிதமிருகங்களின் மற்றுமொரு கொடூரமுகம்.!
pollachi issue audio leaked
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் 7 ஆண்டுகளாக சமூகவலைத்தளங்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, மேலும் அதனை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.மேலும் பல உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்ததில் ஒரு சிறுமி இறந்து விட்டதாக கூறி பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கபட்ட பெண் ஒருவர் பேசியுள்ள ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில் அந்த பெண் பேசியதாவது, பொள்ளாச்சி விவகாரத்தில் திருநாவுக்கரசன் கும்பலில் எட்டு பேர்களுக்கும் மேல் இருந்தனர். மேலும் நான் மற்றும் என்னுடன் ஐந்து பெண்கள் அந்த பங்களாவில் சிக்கியிருந்தபோது, எங்களுடன் ஒரு சிறுமியும் அவர்களிடம் சிக்கியிருந்தார். அந்த சிறுமியை இரவுமுழுவதும் அனைவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். அதனால் அந்த சிறுமி இறந்துவிட்டாள்.
பின்னர் இறந்த அந்த சிறுமியின் பிணத்தை அவர்கள் அந்த பங்களாவின் பின்புறம் புதைத்துள்ளனர். இது முழுவதும் உண்மை, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஆடியோவில் பேசியுள்ளார்.
English Summary
pollachi issue audio leaked