களமிறக்கப்பட்ட வெளியூர் கும்பல்.. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முதியவர்- கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடூரம்..! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை வட்டம் ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.வேல்முருகன். இவர் அவ்வப்போது அரசியலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

கொட்டாரக் குப்பத்தில் உள்ள தனது மகனின் பூக்கடையிலிருந்து தனது வீட்டிற்கு தனியே இருசக்கர வாகனத்தில் வந்த ஏ.கே.வேல்முருகனை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் டாடா ஏசி பிக்கப் வண்டியை குறுக்கே நிறுத்தி வேல்முருகனை மடக்கியுள்ளனர்.

தன்னை தாக்க வருகிறார்கள் என வேல்முருகன் தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கே ஏற்கனவே திட்டமிட்டு பதுங்கியிருந்த மேலும் சில மர்ம நபர்கள்  வேல்முருகனை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

அவர் சுயநினைவிழந்து நிலை குலைந்தபின் அவரைத்தூக்கி முட்புதரில் போட்டு விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் சென்றபின் அவ்வழியே சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வேல்முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

முதல் உதவி சிகிச்சைக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு வேல்முருகனை அனுப்பியுள்ளனர்.

சமூகவிரோதிகள் வேல்முருகனை திட்டமிட்டு கொலை வெறியோடு தாக்கியதில் தலை மற்றும் முகத்தில் கொடும் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இரண்டு கால்களும், கை எலும்பும் முறிந்துள்ளது. வெளியூரிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுதான் இக்கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

politically influenced person attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->