சிறை முன்பு போலீசார் எடுத்த விபரீத முடிவு! உயிருக்கு போராடியநிலையில் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருடைய மகன் கருப்பசாமி. 30 வயது நிறைந்த இவர் கோவில்பட்டி சிறையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு மதுராகவன் என்ற 1½ மகன் உள்ளான் .  

இந்நிலையில் கருப்பசாமி நேற்று காலை அலுவலக பணிக்காக, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று, மாலை கோவில்பட்டி சிறைக்கு திரும்பியுள்ளார்.

பின்னர் இரவில் பணி முடிந்து, வீட்டுக்கு புறப்பட்ட நிலையில் கருப்பசாமி திடீரென்று விஷம் குடித்து சிறை முன்பாக மயங்கி விழுந்தார்.

 உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police poisioning infront of imprisonment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->