6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்!. ஆறாவது மனைவி எடுத்த துணிச்சல் முடிவு!. - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் கூலித் தொழில் செய்துவந்துள்ளார். இவர் ஐந்து பெண்களை திருமணம் செய்து மனைவிகளுடன் வாழாமல் பெற்றோருடனே தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேலைத் தொடர்பாக சங்ககர கிரி என்ற ஊருக்கு அடிக்கடி சென்று வந்த போது தங்கவேல் என்பவருடன் பூபதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கவேலுக்கு திருமணம் ஆகும் வயதில் மகள் இருப்பதை அறிந்த பூபதி, தங்கவேலுவிடம் நன்றாக பழகி அவரிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால் பூபதி வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கவேல் மறுத்துள்ளார். ஆனாலும் பூபதி அவரிடம் தொடர்ந்து பேசி தங்கவேலுவை சம்மதிக்க வைத்துள்ளார்.

இதையடுத்து தங்கவேலுவின் மகளுக்கும், பூபதிக்கும் கடந்த மே மாதம் சேலம் ஊத்துமலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலே மனைவியிடம் 10 பவுண் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை, விவசாயம் செய்யவும், குடும்ப செலவுக்காகவும் எனக் கூறி பூபதி வாங்கியுள்ளார்.

கணவனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பூபதியின் மனைவி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பூபதி குறித்து விசாரித்துள்ளார். அப்போது ஏற்கனவே அவருக்கு 5 பெண்களுடன் திருமணமானதும், அவர்களுடன் வாழாமல் துரத்தி விட்டதும் தெரியவந்துள்ளது

இது குறித்து அவர் பூபதியிடம் கேட்ட போது, வீட்டில் அடைத்து வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பிய பூபதியின் ஆறாவது மனைவி சங்ககிரியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பூபதியை கைது செய்த நிலையில், உடந்தையாக இருந்த அவரின் தாய் மற்றும் தந்தையை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police have arrested a man who has been cheat and married six women.


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->