6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற திமுகவினர் - துப்பாக்கி எடுத்ததும் பிடித்த ஓட்டம் : கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்!
police-firing-in-arcot-in-arakonam-constituency
வேலூர்அடுத்த கீழ்விசாரத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பு வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற திமுகவினரை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடந்தது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட கீழ் விசாரத்தில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த அனைவரும் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வாக்குப்பதிவு முடிவுற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், 6 மணிக்கு மேல் அங்கு வந்த திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றனர்.
அதிகாரிகளும் காவல்துறையினரும் எடுத்து கூறியும் அவர்கள் தொடர்ந்து வாக்கு வாதம் செய்தவாரே உள்ளே நுழைய முயன்றனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் உடனடியாக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து திமுகவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
திமுகவினரை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
police-firing-in-arcot-in-arakonam-constituency