ஜோசப் கருணை இல்லப் பாதிரியார் தாமஸ்கு மீண்டும் சிக்கல்-2 பிரிவுகளில் வழக்கு பதிவு..!
ஜோசப் கருணை இல்லப் பாதிரியார் தாமஸ்கு மீண்டும் சிக்கல்-2 பிரிவுகளில் வழக்கு பதிவு..!
காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்த முதியவர்கள் இறந்த பின் சட்ட புறம்பாக இவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்குக் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும் இங்கு சேர்க்கப்படும் முதியவர்கள் பெரும்பாலானோர் மர்மமாக இறப்பதாகவும்,அரசு மற்றும் நகராட்சியிடம் முறையான முன்அனுமதி வாங்காமல் இவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல்,அங்கே உள்ள சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய அறைகளில் பதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து கலெக்டரின் ஆணைப்படி,வருவாய்த் துறை,சமூக நலத் துறை,காவல் துறை முதலிய 6 துறையை சேர்ந்த அதிகாரிகள் ஜோசப் கருணை இல்லத்தில் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு அங்கிருந்த முதியவர்களை தொழுப்பேடு, பனையூர் முதலிய பல்வேறு இடங்களில் உள்ள அரசு அனுமதி பெற்ற காப்பகங்களுக்கு மாற்றம் செய்தனர். மேலும் உடல்நலம் குன்றியவர்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இப்போது செங்கல்பட்டு இளைஞர் நீதி குழுமம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுமம் ஆகியோர் சார்பில் தாமஸ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரில், "பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் சபிதா நான்சி, சூரிய பிரகாஷ், தேசி கபிரியன் ரோஸ்லின் ஜேனோவா, ஏஞ்சலினா,ஜெசி, ஜெஸ்லின், எமா, இளவரசி, ஆகிய 9 குழந்தைகளைச் சட்ட விரோதமாக நிர்வாகி தாமஸ் அடைத்து வைத்திருந்தார்.அதுமட்டுமிலாமல் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற முறையில் கருணை இல்லத்தை நடத்திவருகிறார்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.புகாரின் பேரில் சாலவாக்கம் போலீசார் பாதிரியார் தாமஸ் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
English Summary
police file 2 cases on thomas who is joseph karunai illam chairman