விருதுநகரில் கடத்தப்பட்ட குழந்தை 6 மணி நேரத்தில் மீட்பு..! சினிமாவை மிஞ்சம் சம்பவம்…!!
விருதுநகரில் கடத்தப்பட்ட குழந்தை 6 மணி நேரத்தில் மீட்பு..! சினிமாவை மிஞ்சம் சம்பவம்…!!
விருதுநகர் சிவந்திபுரத்தைச் சேர்ந்தவர், ராஜ் திலக்(வயது 27). இவரது மனைவி, கனகலட்சுமி (வயது 25). இவர்களுக்கு ராஜினி (வயது 2) என்ற குழந்தை உள்ளது.
ராஜ் திலக், ஆத்துமேடு பருப்பு மில்லில் கேசியராகப் பணி புரிந்து வருகிறார். இந்த மில்லில் சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பணி புரிந்து வந்துள்ளார்.
வெங்கடேஷ், கம்பெனிக்குத் தெரியாமல், 2 மூடைகளை எடுத்து சென்று விட்டார்.
இதைக் கண்டு பிடித்த ராஜ்திலக், அந்த 2 மூடைகளை, வைத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளார். நேற்று காலை, வெங்கடேஷ் மற்றும், அவரது சென்னை நண்பர்கள், அசோக், பிரபு ஆகியோருடன் சேர்ந்து, ராஜ்திலக்கை ஃபோன் போட்டு, வரச் சொன்னார்.
அதனால், தன் குழந்தையுடன் ராஜ் திலக், வெங்கடேசனைச் சந்திக்க, டூ வீலரில் சென்றார். அப்போது, வெங்கடேசன், ராஜ் திலக்கின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது குழந்தையைப் பறித்துள்ளார்.
மேலும், அவரிடம், “கம்பெனி முதலாளியின் குழந்தையை என்னிடம் ஒப்படைத்து விட்டு, உன் குழந்தையை மீட்டுச் செல்” என்று கூறி உள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட, குழந்தையின் தாய் கனகலட்சுமி, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனே, போலீசார், குழந்தை கடத்தப்பட்ட சிவந்திபுரம் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குழந்தையைத் தேடினர். பின், வெங்கடேசனை, அவரது அறையில் வைத்து, கைது செய்தனர்.
பின், அவரை விசாரித்த போது, அவரது நண்பர்கள், குழந்தையை, விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றது, தெரிய வந்தது. உடன், அந்தப் பகுதியில் தேடிய போலீசார், அங்கு அழுதபடி நின்றிருந்த குழந்தையைக் கண்டு பிடித்தனர். அதன் தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது, மில் முதலாளியின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் காவல் போடப் பட்டுள்ளது.
English Summary
police fide with 6 hour 2 year old kidnapped