கள்ளக்காதல் விவகாரம்: தனி ஒருவனாக கொலையை தடுத்த போலீஸ்!! - Seithipunal
Seithipunal



சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் தரமணியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை தி நகரை சேர்ந்த மதன் இவரின் மனைவிக்கும் ஹரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதை தெரிந்துகொண்ட மதன், 4 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து ஹரியை ஆட்டோவில் கடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்துபோன ஹரி உதவி கேட்டு அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்ட காவல் உதவி ஆய்வாளர் அவர்களை மடக்கி பிடித்து கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் படுகாயங்களுடன் இருந்த ஹரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் தனி ஒருவனாக நின்று கொலை முயற்சியை தடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு உயர் அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police avoid murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->