லஞ்சம் தர மறுத்த பெட்டிக்கடைகாரர் மீது கொலைவெறி தாக்குதல்.! அப்பாவியிடம் 50,000 ரூபாயை பறித்த போலீஸ்.!!
லஞ்சம் தர மறுத்த பெட்டிக்கடைகாரர் மீது கொலைவெறி தாக்குதல்.! அப்பாவியிடம் 50,000 ரூபாயை பறித்த போலீஸ்.!!
தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடி வருகிறது, இதற்கு எடுத்துக்காட்டாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபடியைச் சேர்ந்த பால்சாமி என்பவர் தமிழக அரசு மதுக்கடை அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ரோந்து பணிக்கு சென்ற கன்னியபிள்ளைப்பட்டி காவல்நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் பால்சாமியிடம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அவர்கள் கேட்ட லஞ்ச பணத்தை பால்சாமி தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் சாலையில் இருந்த கல்லை எடுத்து பால்சாமியின் தலையில் சரமாரியாக தாக்கியது மட்டும் இல்லாமல், அவரிடமிருந்து 50,000 ரூபாயை பணத்தையும் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனால், படுகாயமடைந்த பால்சாமியை, பொதுமக்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, பால்சாமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
police attacked to The boxer who refused to bribe