என்னடா இது ரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு வந்த சோதனை!
என்னடா இது ரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு வந்த சோதனை!
பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை, தட்டிக்கேட்ட ஊர் கவுண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்டாட்டிக்காரர் அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி அருகே கூடுமாக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(49). ஓசூரில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் கூடுமாக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களிடம் கேலி, கிண்டல் செய்தவாறு தவறான முறையில் நடந்துள்ளார். அந்த வழியாக வந்த அந்த ஊரின் கவுண்டர் முனியப்பன்(58) இதை பார்த்து நாகராஜை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், கோவமடைந்த நாகராஜ் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் முனியப்பன் புகார் தெரிவித்தார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காவல் நிலையத்தில் திரண்டு சென்று அந்த ரெண்டு பொண்டாட்டிக்காரன் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
English Summary
POLICE ARRESTED A DOUBLE WIFE MAN