இராசபாளையத்தில்., பொங்கல் பண்டிகை சிறப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கொடியேற்றம்.!!
pmk flag on viruthunagar district rajapalayam
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த கொடியேற்று விழாவின் மூலம் இராசபாளையம் பகுதியில் உள்ள தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவனையின் முன்புறம்., வேட்டை பெருமாள் கோவில் வடபுறம் உள்ள தெரு மற்றும் இராசபாளையம் - தென்காசி சாலையில் உள்ள மதுரை இராசா கடை தெரு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியானது ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.மாஸ்டர் மணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்., இராசை. தெற்கு நகர செயலாளர் திரு.R.கண்ணன்., இராசை.வடக்கு நகர செயலாளர் திரு.D.எபனேசர்., நகர துணை செயலாளர் திரு.சரவணன்., ஒன்றிய செயலாளர் திரு.G.ஆறுமுகம்., திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் திரு.அ.இராமர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.ந.காளிதாசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்., மாநில துணை பொதுச்செயலர் திரு.சிற்பி இலட்சுமணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளீர் அணி சார்பில் பூ.இராமலட்சுமி., கவிதா., மீனாட்சி., மாரி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் திரு.இரா.பூர்ணச்சந்திரன் மற்றும் பூ.தங்கச்செல்வன் ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கு தேவையான பணிகளை செய்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.முத்துகிருஷ்ணன்., இரா.இராம்பாண்டி., வனப்பேச்சி ., இராதாகிருஷ்ணராஜா., M.கோவிந்தராஜ்., R.மாரியப்பன்., T.தியாகராசன்., V.காளியப்பன் மற்றும் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
English Summary
pmk flag on viruthunagar district rajapalayam