காதலால் மாணவிகளுக்கு தொடரும் தொல்லைகள் .,பிளஸ் 2 மாணவி தற்கொலை ..!
காதலால் மாணவிகளுக்கு தொடரும் தொல்லைகள் .,பிளஸ் 2 மாணவி தற்கொலை ..!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சக மாணவன் ஈவ்டீசிங் செய்ததால் விரக்தியடைந்த +2 மாணவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு தலை காதல் காரணமாக சக மாணவன் மாணவியின் ஹால்டிக்கெட்டை கிழித்து போட்டதால் மனமுடைந்து மாணவி தற்கொலை முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி. அகரம் அரசுப் பள்ளியில் தமிழரசி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய வகுப்பை சேர்ந்த பசுபதி என்ற மாணவன் தமிழரசியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தமிழரசிக்கு மாணவன் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனிடையே மாணவிக்கு நேற்று சிறப்பு வகுப்பு நடைபெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பு முடிந்து மாணவி வெளியே வந்தபோது, சக மாணவர்களான பசுபதி மற்றும் சந்தன பாண்டியன் மாணவியின் ஹால்டிக்கெட் மற்றும் புத்தகங்களை வாங்கி கிழித்துள்ளனர். இதனால் மாணவி அவமானத்தில் மூழ்கியிருக்கிறார்.
இதனால் மனமுடைந்த தமிழரசி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி தமிழரசியின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்னரே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
students suicided for torture of love, plus 2 student suicide