நள்ளிரவில்.. "அம்பேத்கர் சிலை" மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. கடலூரில் பதற்றம்.!!
Petrol bomb attack on Ambedkar statue in Cuddalore
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் மீது நேற்று இரவு 12:30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அந்த குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதனால் பதறிப்போன அம்பலவாணன் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அம்பலவாணன் பேட்டை பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 21 வயதாகும் வெற்றி, கிருஷ்ணகுமார், 22 வயதாகும் விஜயராஜ், 29 வயதாகும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Petrol bomb attack on Ambedkar statue in Cuddalore