#BREAKING பெதாய் புயல்! சென்னை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் பெதாய் என்ற புயல் உருவாகி உள்ளதா காரணமாக, சென்னை உட்பட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், 

* வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி 11 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

* இந்த தாழ்வு நிலை சென்னையில் இருந்து கிழக்கே 800 கி.மீ. தூரத்தில் நிலைக் கொண்டுள்ளதாகவும் 

* அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

* இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கி நாடா இடையே கரையை கடக்க உள்ளது. 

* இந்த புயல் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் ஆந்திர மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

* தமிழகத்தை பொறுத்தவரை தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று கனமழையும் நாளை அதிக கனமழையும் பெய்யும். 

* மணிக்கு 80 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதால் சென்னை உட்பட வட தமிழக கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, சென்னை எண்ணூர், கடலூர், நாகை துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PETHAI CYCLONE IN CHENNAI ALERT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->