பண்ருட்டி : கபடி வீரர் களத்திலேயே உயிரைவிட்ட சோகம்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பெரியபுறங்கணி பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வருகிறார். 

இந்த நிலையில், விமல்ராஜ் நேற்று பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடினார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

அவர் கீழே விழுந்த நிலையிலும் எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்டுள்ளார். இதில் அவரது மார்பில் அடிபட்டு மயங்கினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் காவல்துறையினர் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyapurankani kabadi player dead


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->