வீட்டிற்குள் சிறை வைத்து,சும்மா வளைச்சு கட்டி திட்டி தீர்த்த பொது மக்கள் .,காலில் விழுந்து கதறிய ஏட்டு.!
வீட்டிற்குள் சிறை வைத்து,சும்மா வளைச்சு கட்டி திட்டி தீர்த்த பொது மக்கள் .,
நெல்லை: கீழப்பாவூரில் இளம்பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஏட்டுவை பொதுமக்கள் திட்டி தீர்ப்பதும் ,அவர்கள் காலில் விழுந்து கதறும் காட்சிகளும் வாட்ஸ்அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஏட்டாக பணிபுரிபவர் நடராஜன் (35). அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. மனைவி குழந்தைகள் ஊரில் விட்டுவிட்டு , கீழப்பாவூர் அருகே உள்ள ராஜேஸ்வரி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்துவந்தார்.
இந்நிலையில், நிலப்பிரச்னைக்காக போலீஸ் நிலையத்துக்கு வந்த ஓர் இளம்பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது ஏட்டுவின் வீட்டில் ரகசியமாக சந்தித்து உறவாடினர்.
இது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்ததும், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் தனிமையில் சந்தித்தபோது, நைசாக வீட்டின் கதவை இழுத்துப்பூட்டினர். பின்னர் அனைவரும் சென்று ஏட்டையும் இளம்பெண்ணையும் திட்டி தீர்த்தனர். போலீசுக்கும் தகவல் அளித்தனர்.
அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விரைந்துவந்து ஏட்டை மீட்டு,அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். மேலும் இது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
people house arrest the police.,for illegal relationship with a girl