மதுரை: பிஸ்கட் வைத்திருந்ததற்காக.! ஊரே கூடி பெண்ணை கொடூரமாக தாக்கிய கிராம மக்கள்!!
மதுரை: பிஸ்கட் வைத்திருந்ததற்காக.! ஊரே கூடி பெண்ணை கொடூரமாக தாக்கிய கிராம மக்கள்!!
சமீப காலமாக, வாட்ஸ் அப்பில், ஒரு ஆண் பேசும் ஆடீயோ, வைரலாகப் பரவி வருகிறது. அதில், “வட இந்தியர்கள் என்று யாரைக் கண்டாலும் விடாதீர்கள், அவர்களைப் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துங்கள். இல்லா விட்டால், அவர்கள், உங்கள் குழந்தைகளைக் கடத்திச் சென்று, பிச்சை எடுக்க வைத்து விடுவார்கள்” என்று ஆவேசமாக ஒருவர் பேசுகிறார்.
இந்த ஆடியோவால், தற்போது அதிக சர்ச்சை எழுந்துள்ளது. வட இந்தியர்கள் என்று யார் அடையாளம் காணப் பட்டாலும், கிராமத்தில் உள்ளவர்கள், எதைப் பற்றியும் விசாரிக்காமல், அவர்களைத் தாக்கத் துவங்குகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலுார் அருகே உள்ள, பதினெட்டாங்குடியில், நேற்று நைட்டி அணிந்த பெண் ஒருவர், ஆண் போல், முடி வெட்டிய நிலையில், கையில் பிஸ்கெட் பாக்கெட்டுடன் திரிந்துள்ளார்.
அவரைக் கண்ட அந்தக் கிராம மக்கள், இது பெண் அல்ல. நைட்டி போட்டு, பெண் வேடம் போட்ட ஆண், என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு, அந்தப் பெண்ணைக் கட்டி வைத்து தாக்கத் துவங்கினர்.
இதைக் கேள்விப்பட்ட மேலுார் போலீசார், விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டனர். விசாரித்த போது, அவர் மன நலம் பாதித்த, வட இந்தியப் பெண் என்பது தெரிய வந்தது.
மேலும் போலீசார், அந்த கிராம மக்களிடம், “சந்தேகப் படும்படி யாராவது வந்தால், எங்களுக்கு தகவல் கொடுங்கள். யாரும் தாக்க வேண்டாம், என்று கேட்டுக் கொண்டனர்.
English Summary
PEOPLE ATTACK IN INNOCENT LADY