நான்கு பிள்ளைகளை பெற்று அவர்களின் கடமையை பூர்த்தி செய்த பெற்றோருக்கு ஏற்பட்ட நிலை!. பரிதாப சம்பவம்!.
தாய் தந்தையை கண்டுகொள்ளாத பிள்ளைகள், பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்தும் ஒரு பிள்ளை கூட சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுக்காத காரணத்தால் வயதான காலத்தில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ராமன் மற்றும் இருசம்மாள் ஆகிய இருவருக்கும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ராமன் திருமணம் நடத்தி வைத்துள்ளார். நான்கு பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
பிள்ளைகள் யாரும் பெற்றோரை வந்து பார்த்தது கிடையாது. இவர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் கவனிப்பதில்லை. யாரும் கவனிக்காத நிலையில் தனியாக வசித்து வந்தனர். இதனால் ராமனும், இருசம்மாளும் மனமுடைந்தனர்.
இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது இவர்கள் அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்துள்ளது.
உடனடியாக அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து அவர்களின் கடமையை நிறைவேற்றிய பெற்றோருக்கு ஏற்பட்ட நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
parents got suicide for their children