'நம்பர் ஒன் குடிகாரன் தான் இப்படியெல்லாம் உளறுவான்' ஸ்டாலினை கட்டம் கட்டிய அமைச்சர்!
OS maniyan says about stalin
மறந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 24 ம் தேதி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கைத்தறி துறை அமைச்சர் OS மணியன் கலந்துகொண்டார்.
அதில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், அவர் மேடையில் உரையாற்றினார். அந்த உரையில்," எடப்பாடியாரின் ஆட்சி சிறந்து விளங்குகிறது. மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து செயல்படுகிறார்.
ஸ்டாலின் பேசுவதை பார்த்தால், டாஸ்மாக் சென்று வந்தவரை போல பேசுகிறார். நம்பர் ஒன் குடிகாரன் தான் இப்படியெல்லாம் உளறுவான். கலைஞர் கருணாநிதி இறக்கும் வரை யாரிடமும் தவறாக பேசி நான் பார்த்தது இல்லை.
கருணாநிதி எங்கு எப்படி பேச வேண்டும் என்ற அரசியல் நாகரீகம் அறிந்தவர். அவர் இப்படி குடிகாரன் போல பேசி நான் பார்த்ததே இல்லை. " என கூறியுள்ளார்.
English Summary
OS maniyan says about stalin