திமுகவிற்கு பூஜ்யம்; அதிமுகவிற்கு ராஜ்ஜியம்., அமைச்சர் அதிரடியாக பேசிய பஞ்ச்!!
OS Maniyan says about Dmk
நாகை மக்களவைத் தொகுதிக்கான அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது. நேற்று, முன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் பங்கேற்றார்.
மேலும், இதில் இந்திய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் ஓ எஸ் மணியன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் நமது கூட்டணியில் உள்ளன. வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக பெறப்போவது பூஜ்ஜியம். அதிமுகவிற்கு கிடைக்கப்போகிறது ராஜ்யம்.
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி வழியாக கோடியக்கரை உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு அதிமுக வலியுறுத்தி வருகிறது. அந்த திட்டம் தற்பொழுது தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒன்னேகால் மணி நேரத்தில் எந்தவித விபத்தும், பாதிப்பும் இல்லாமல் தஞ்சாவூரை சென்றடையலாம். இதேபோல் விழுப்புரம் நாகை இடையே 7,000 கோடி செலவில் நான்கு வழி சாலை பணி தொடங்க இருக்கின்றது." என கூறினார்.
English Summary
OS Maniyan says about Dmk