பரபரப்பான சூழ்நிலையில் விசாரணைக்கு வந்த ஓபிஎஸ் வழக்கு..! நீதிபதி அதிரடி உத்தரவு!!
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் முதல்- அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்றார்.
அதன்பின் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், தர்மயுத்தம் ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டது. அந்த சமயத்தில் தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
பின்னர் தர்மயுத்தத்தை முடித்துக்கொண்ட ஓபிஎஸ் அணியும், பழனிச்சாமி தலைமையில் ஆன அணியும் ஒன்றாக இணைந்து அதிமுக கட்சியையும், சின்னத்தையும் தங்கள் வசப்படுத்தினர்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் விசாரணை செய்த நீதிபதிகள், திமுக மற்றும் தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதை அடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணை வந்த போது, ஜனவரி 9க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
திமுக கொறடா சக்கரபாணி, டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
OPS 11 MLA Case Hight Court